பதினோராம் பத்து

கலி விருத்தம்

1952 குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை
அன்று காத்தவம் மான்,அ ரக்கரை
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன். 1.1

1953 காரும் வார்பனிக் கடலும் அன்னவன்,
தாரு மார்வமும் கண்ட தண்டமோ,
சோரு மாமுகில் துளியி னூடுவந்து
ஈர வாடைதான் ஈரு மென்னையே. 1.2

1954 சங்கு மாமையும் தளரு மேனிமேல்,
திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,
கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே. 1.3

1955 அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று,
அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,
கொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ,
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே 1.4

1956 அங்கொ ராளரி யாய்,அ வுணனைப்
பங்க மாவிரு கூறு செய்தவன்,
மங்குல் மாமதி வாங்க வேகொலோ
பொங்கு மாகடல் புலம்பு கின்றதே. 1.5

1957 சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,
அன்றி லின்குரல் அடரு மென்னையே. 1.6

1958 பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,
வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,
ஆவி யேயிலக் காக எய்வதே. 1.7

1959 மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,
மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக,
கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர்
ஆலி வந்ததால் அரிது காவலே. 1.8

1960 கொண்டை யொண்கணும் துயிலும், என்நிறம்
பண்டு பண்டுபோ லொக்கும், மிக்கசீர்த்
தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,
வண்டு கொண்டுவந் தூது மாகிலே 1.9

1961 அன்று பாரதத் தைவர் தூதனாய்,
சென்ற மாயனைச் செங்கண் மாலினை,
மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி
கன்றி, சொல்வல்லார்க் கல்ல லில்லையே 1.10


கலி நிலைத்துறை

1962 குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை
யாரொடும்
மன்றில் குரவை யிணைந்த மாலென்னை
மால்செய்தான்,
முன்றில் தனிநின்ற பெண்ணை
மேல்கிடந் தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க
கிற்பவ ரார்கொலோ.
2.1

1963 பூங்கு ருந்தொசித்து ஆனை
காய்ந்தரி மாச்செகுத்து,
ஆங்கு வேழத்தின் கொம்பு
கொண்டுவன் பேய்முலை
வாங்கி யுண்ட,அவ் வாயன்
நிற்கஇவ் வாயன்வாய்,
ஏங்கு வேய்ங்குழல் என்னோ
டாடும் இளமையே.
2.2

1964 மல்லோடு கஞ்சனும் துஞ்ச
வென்ற மணிவண்ணன்,
அல்லி மலர்த்தண் டுழாய்நி
னைந்திருந் தேனையே,
எல்லி யின்மா ருதம்வந்
தடுமது வன்றியும்,
கொல்லைவல் லேற்றின் மணியும்
கோயின்மை செய்யுமே.
2.3

1965 பொருந்து மாமர மேழு
செய்த புனிதனார்
திருந்து சேவடி யென்ம
னத்து நினைதொறும்,
கருந்தண் மாகடல் மங்கு
லார்க்கும் அதுவன்றியும்,
வருந்த வாடை வருமி
தற்கினி யென்செய்கேன்.
2.4

1966 அன்னை முனிவதும் அன்றி
லின் குர லீர்வதும்,
மன்னு மறிகட லார்ப்ப
தும்வளை சோர்வதும்,
பொன்னங் கலையல்கு லன்ன
மென்னடைப் பூங்குழல்,
பின்னை மணாளர் திறத்த
வாயின பின்னையே
2.5

1967 ஆழியும் சங்கு முடைய
நங்கள் அடிகள்தாம்,
பாழிமை யான கனவில்
நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழிய
வையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக்
கூரிரு ளாயிற்றே.
2.6

1968 காமன் றனக்கு முரையல்
லேன்கடல் வண்ணனார்,
மாமண வாள ரெனக்குத்
தானும் மகன்சொல்லில்,
யாமங்கள் தோறெரி வீசு
மென்னிளங் கொங்கைகள்,
மாமணி வண்ணர் திறத்த
வாய்வளர் கின்றவே.
2.7

1969 மன்சுறு மாலிருஞ் சோலை
நின்ற மணாளனார்,
நெஞ்சம் நிறைகொண்டு போயி
னார்நினை கின்றிலர்,
வெஞ்சுடர் போய்விடி யாமல்
எவ்விடம் புக்கதோ,
நஞ்சு உடலம் துயின்றால்
நமக்கினி நல்லதே.
2.8

1970 காமன் கணைக்கோ ரிலக்க
மாய்நலத் தில்மிகு,
பூமரு கோலநம் பெண்மை
சிந்தித்தி ராதுபோய்
தூமலர் நீர்கொடு தோழி.
நாம்தொழு தேத்தினால்
கார்முகில் வண்ணரைக் கண்க
ளால்காண லாங்கொலோ.
2.9

1971 வென்றி விடையுட னேழ
டர்த்த அடிகளை,
மன்றில் மலிபுகழ் மங்கை
மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதுமு
ரைப்பவர் தங்கள்மேல்
என்றும் நில்லாவினை யொன்றும்
சொல்லி லுலகிலே
2.10


தரவு கொச்சகக் கலிப்பா

1972 மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப்
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்
தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்
என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே. 3.1

1973 இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர்
பருந்தாள் களிற்றுக் கருள்செய்த, செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட
வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே. 3.2

1974 அன்னே. இவரை யறிவன், மறைநான்கும்
முன்னே யுரைத்த முனிவ ரிவர்வந்து
பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து
என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே. 3.3

1975 அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு,
வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி,
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே? 3.4

1976 தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு,
தம்மையே யொக்க அருள்செய்வ ராதலால்,
தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி,
தம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே. 3.5

1977 வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம்
உற்றா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும்
எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி,
கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே 3.6

1978 கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்
என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே. 3.7

1979 பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம்
கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே. 3.8

1980 நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும்,
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே. 3.9

1981 பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்
பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,
கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க
லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே 3.10


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1982 நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம்
உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை
என்ன அரணாவ னென்னு மருளால்
அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட
ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை
மாலை மறவா திறைஞ்சென் மனனே.
4.1

1983 செருமிகு வாளெ யிற்ற அரவொன்று
சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும்
குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற்
பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன்மை அடலாமை
யான திருமால் நமக்கொ ரரணே.
4.2.

1984 தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர்
உம்ப ருலகேழி னோடு
முடனே, மாதிர மண்சு மந்து வடகுன்று
நின்ற மலையாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட
லத்தி னொருபா லொடுங்க வளர்சேர்,
ஆதிமுன் ஏன மாகி அரணாய
மூர்த்தி அதுனம்மை யாளு மரசே.
4.3.

1985 தளையவிழ் கோதை மாலை யிருபால்
தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,
அளவெழ வெம்மை மிக்க அரியாகி
அன்று பரியோன் சினங்க ளவிழ,
வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன
தாகம் மதியாது சென்றொ ருகிரால்
பிளவெழ விட்ட குட்ட மதுவைய
மூடு பெருநீரில் மும்மை பெரிதே.
4.4.

1986 வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி
அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி
வைய முடிமூன் றிரந்து பெறினும்,
மந்திர மீது போகி மதிநின்றி
றைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர்,
அந்தர மேழி னூடு செலவுய்த்த
பாதம் அதுநம்மை யாளு மரசே.
4.5.

1987 இருநில மன்னர் தம்மை யிருநாலும்
எட்டு மொருநாலு மொன்று முடனே,
செரு_த லூடு போகி யவராவி
மங்க மழுவாளில் வென்ற திறலோன்,
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை
நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,
பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய
ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே.
4.6.

1988 இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம்
என்ன இனமாய மான்பின் எழில்சேர்
அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப
தற்கொ ருருவாய மானை யாமையா,
கொலைமலி யெய்து வித்த கொடியோன்
இலங்கை பொடியாக வென்றி யமருள்,
சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த
நங்கள் திருமால் நமக்கொ ரரணே.
4.7.

1989
முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி
யுண்ண முதலோடு வீடு மறியாது,
என்னிது வந்த தென்ன இமையோர்
திகைப்ப எழில்வேத மின்றி மறைய,
பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும்
நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ,
அன்னம தாயி ருந்தங் கற_ல்
உரைத்த அதுநம்மை யாளு மரசே.
4.8.

1990 துணைநிலை மற்றெ மக்கொ ருளதென்
றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உணமுலை முங்கொடுத்த வுரவோள
தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி,
பணமுலை யாயர் மாத ருரலோடு
கட்ட அதனோடு மோடி அடல்சேர்,
இணைமரு திற்று வீழ நடைகற்ற
தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே.
4.9.

1991 கொலைகெழு செம்மு கத்த களிறொன்று
கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த
நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்
கலிகெழு மாட வீதி வயல்மங்கை
மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்,
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற
தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே.
4.10


தரவு கொச்சக் கலிப்பா

1992 மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே 5.1

1993 தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ,
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே 5.2

1994 ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே 5.3

1995 அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,
எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே 5.4

1996 வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே 5.5

1997 கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப,
மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ,
மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும்,
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே 5.6

1998 கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,
ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே 5.7

1999 பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,
தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே 5.8

2000 கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்
விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே 5.9

2001 கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான்,
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ,
வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி
உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே 5.10


கலி நிலைத்துறை

2002 மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி
வானவரும் யாமுமெல்லாம்,
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்
நெடுங்காலம் கிடந்ததோரீர்,
எந்நன்றி செய்தாரா ஏதிலோர்
தெய்வத்தை யேத்துகின்றீர்?
செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள்.
அண்டனையே ஏத்தீர்களே
6.1

2003 நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின்
மீதோடி நிமிர்ந்தகாலம்,
மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட
மகப்படுத்த காலத்து, அன்று
எல்லாரும் அறியாரோ எம்பெருமான்
உண்டுமிழ்ந்த எச்சில்தேவர்,
அல்லாதார் தாமுளரே? அவனருளே
உலகாவ தறியீர்களே?
6.2

2004 நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய்
நான்முகனும் நீண்டநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும்
உள்ளிட்ட அமரரோடும்,
வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல்
தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கொற்றப்போ ராழியான் குணம்பரவாச்
சிறுதொண்டர் கொடியவாறே.
6.3

2005 பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம்
நெடுங்கடலே யானகாலம்,
இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம்
ஏழினையும் ஊழில்வாங்கி
முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில்
வைத்தும்மை உய்யக்கொண்ட
கனிகளவத் திருவுருவத் தொருவனையே
கழல்தொழுமா கல்லீர்களே
6.4

2006 பாராரும் காணாமே பரவைமா
நெடுங்கடலே யானகாலம்,
ஆரானும் அவனுடைய திருவயிற்றில்
நெடுங்காலம் கிடந்தது,உள்ளத்
தோராத வுணர்விலீர். உணருதிரேல்
உலகளந்த வும்பர்கோமான்,
பேராளன் பேரான பேர்களா
யிரங்களுமே பேசீர்களே
6.5

2007 பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின்
மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன்
வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்,
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம்
கொண்டாடும் தொண்டீர், பெற்ற
தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ
மாட்டாத தகவற்றீரே.
6.6

2008 மண்ணாடும் விண்ணாடும் வானவரும்
தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
கழல்சூடி, அவனையுள்ளத்
தெண்ணாத மானிடத்தை யெண்ணாத
போதெல்லா மினியவாறே
6.7

2009 மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து
பரந்தேறி யண்டத்தப்பால்,
புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம்
ஏழினையும் ஊழில்வாங்கி,
அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில்
வைத்தும்மை யுய்யக்கொண்ட,
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை
நினையாதார் நீசர்தாமே.
6.8

2010 அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த்
திரைததும்ப ஆவவென்று,
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும்
தானருளி, உலகமேழும்
உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில்
வைத்தும்மை யுய்யக்கொண்ட,
கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை
நகர்ப்பாடி யாடீர்களே
6.9

2011 தேவரையும் அசுரரையும் திசைகளையும்
கடல்களையும் மற்றும் முற்றும்,
யாவரையு மொழியாமே யெம்பெருமான்
உண்டுமிழ்ந்த தறிந்துசொன்ன,
காவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி
ஒலிமாலை கற்று வல்லார்,
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்
பொன்னுலகில் பொலிவர் தாமே
6.10


தரவு கொச்சக் கலிப்பா

2012 நீணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப்
பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை,
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை,
காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே 7.1

2013 நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்,
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,
தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை,
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே 7.2

2014 தூயானைத் தூய மறையானை, தென்னாலி
மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட
வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,
பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே 7.3

2015 கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,
ஓடா அடலரியை உம்பரார் கோமனை,
தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்
பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே 7.4

2016 மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே 7.5

2017 கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்,
முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால்,
புள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,
உள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே 7.6

2018 கனையார் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று,
நினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே 7.7

2019 வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட
சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்
தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே 7.8

2020 தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,
தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்,
ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார்,
மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே 7.9

2021 மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்
கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,
கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,
ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே 7.10


கலிவிருத்தம்

2022 மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம்,
ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்,
நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ. 8.1

2023 சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி,
காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல,
ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா. 8.2

2024 தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா. 8.3

2025 உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
திரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி,
இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல்,
உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா. 8.4

2026 கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்,
தள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி,
வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே,
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா. 8.5

2027 படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா,
இடையன் எறிந்த மரமேயொத் திராமே,
அடைய அருளா யெனக்குன்ற னருளே 8.6

2028 வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன்
நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன்,
தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப்
பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ. 8.7

2029 அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,
மணியே. மணிமா ணிக்கமே. மதுசூதா,
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ. 8.8

2030 நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும்
எந்தாய். தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய்,
சந்தோகா. தலைவனே. தாமரைக் கண்ணா,
அந்தோ. அடியேற் கருளாயுன் னருளே 8.9

2031 குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை,
மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல்,
என்றும் வினையாயின சாரகில் லாவே 8.10


திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.